tamilni 262 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கமாக மாறும் கரட்

Share

இலங்கையில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை நேற்று 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலை நாளாந்தம் அதிகரித்து வருது போன்று சமகாலத்தில் மரக்கறிகளின் விலைகளும் பாரியளவில் அதித்துள்ளது.

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று ஒரு கிலோ கரட் 2200 ரூபா சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை ஒரு கிலோ கரட் 1400 ரூபாய் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரட்டிற்கு மேலதிகமாக பீன்ஸ் 1400 ரூபாவிற்கும் பீட்ரூட் 1200 ரூபாவிற்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1800 ரூபாவாக அதிகரித்திருந்தது. நுவரெலியா தோட்டங்களில் இருந்து விவசாயிகள் ஒரு கிலோ கரட்டை1700 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர்.

சாதாரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் 40,000 முதல் 45,000 கிலோகிராம் வரையான கரட் கிடைக்கும், ஆனால் இந்த நாட்களில் பெறப்படும் கரட்டின் மொத்த அளவு 5,000 கிலோகிராமிற்கும் குறைவாகவே குறைந்துள்ளது.

இதன்காரணமாக கரட்டின் விலை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ கேரட்டின் விலை மேலும் உயரும் என பொருளாதார மைய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

கரட்டின் விலை அதிகரிப்பு காரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் கரட் விற்பனை செய்யப்படுவதில்லை.

தற்போது மழையுடனான காலநிலை குறைந்து வரும் நிலையில் கரட் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவை எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் அறுவடை செய்யப்படும், எனவே அதுவரை கரட்டின் விலை உயரும் என்று பொருளாதார மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...