tamilnaadi 41 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் வல்லுநர்கள்: பாரதூரமான நிலை

Share

தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடு தற்போது பொருளாதார ரீதியாக சாதகமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடி தற்காலிகமானது, சரியான பாதையில் சென்றால் இதனை வென்றிட முடியும்.

பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் ஏற்படவில்லை. உலகின் மற்றைய நாடுகளைப் போலவே நாமும் சரிந்தோம். ஆனால் உலகின் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாம் விரைவாக மீட்சிபெற்றோம்.

எங்களின் கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் தீர்ந்துவிடவில்லை. இதற்கு சிறிது காலம் எடுத்தாலும், தற்போது பொருளாதாரம் சாதகமாக இருப்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கியுள்ளோம்.

ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டுவது நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழியாக அமையாது. இது ஒரு தற்காலிக நிலைமை. எதிர்காலத்தில், இழந்த நம்பிக்கைகள் அல்லது நன்மைகளை மீண்டும் பெறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
wimal weerawansa
செய்திகள்அரசியல்இலங்கை

விமல் வீரவன்ச உள்ளிட்ட அறுவருக்கு எதிரான வழக்கு: கறுவாத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குத்...

gold
இலங்கைசெய்திகள்

உச்சத்தை எட்டும் தங்க விலை: இலங்கையில் ஒரு பவுண் 368,000 ரூபாயைக் கடந்தது!

இலங்கையில் தங்க விலையில் இன்று (19) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும்...

9d3028b0 ffa1 11ed b00f ddb5dcfba4e2.jpg
செய்திகள்இலங்கை

நிலச்சரிவில் வெளிப்பட்ட நீல நிறப் பாறை – ரத்தினக் கல்லா என மக்கள் வியப்பு!

டிட்வா (Ditwa) சூறாவளி காரணமாக நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, கலஹா பகுதியில்...

WhatsApp Image 2026 01 19 at 14.13.35
உலகம்செய்திகள்

சிலி நாட்டில் காட்டுத்தீ ருத்ரதாண்டவம்: 18 பேர் உயிரிழப்பு – 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்!

தென் அமெரிக்க நாடான சிலியில் (Chile) பரவி வரும் கடும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 18...