tamilni 214 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசின் கொடூரங்களுக்கு சர்வதேச நீதியே வேண்டும் – கஜேந்திரன்

Share

தமிழ் மக்களை இலக்கு வைத்து அரசு நிகழ்த்திய கொடூரங்களுக்குச் சர்வதேச நீதி கட்டாயம் வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி முறைமை அழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இந்த நாட்டில் 70 வருடங்களாக இனப்பிரச்சினை இருந்து வருகின்றது. தமிழர்களுக்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்களால் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், பயங்கரவாதம் எனக் கூறி எல்லா விடயங்களையும் மறைக்க முடியாது. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த உண்மை ஏற்கப்பட்டு ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். ஒற்றையாட்சி முறைமை அழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.

அதன்மூலமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...