OIP 19
உலகம்செய்திகள்

30 நிமிடங்களில் வலியில்லாமல் இறப்பதற்கு இயந்திரம் கண்டுபிடிப்பு.., எப்படி செயல்படும்?

Share

எந்தவிதமான வலியும் இல்லாமல் அப்படியே இறப்பதற்கு ஒரு இயந்திரத்தை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடித்துள்ளனர்.

வாழ்க்கையில் மீள முடியாத பிரச்சனையில் இருப்பவர்களும், குடும்பத்தாலும், வெளியுலகத்தாலும், உறவுகளாலும் ஏற்படும் பிரச்சனையில் இருப்பவர்களும் தனக்கான முடிவை தாங்களே எடுத்துக் கொள்கின்றனர்.

தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், அந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் அளித்தும் அவர்கள் துயரமான முடிவை எடுக்கின்றனர்.

இன்னும் சில நாடுகளில் கருணைக் கொலை மற்றும் தற்கொலை ஆகியவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சுவிட்சர்லாந்து நாட்டிலும் தற்கொலை செய்து கொள்வது அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் வலியில்லாமல் இறப்பதற்கு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Exit International என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அந்த இயந்திரத்தை கண்டுபிடித்து அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த மாதிரியான முடிவுகள் எடுப்பவர்கள் இயந்திரத்தை வாங்கி அதற்குள் படுத்தாலே போதும். 30 வலியில்லாமல் இறப்பை சந்திக்கலாம். இயந்திரத்திற்குள் படுப்பவரின் ஆக்சிஜன் சுவாசிக்கும் அளவை குறைத்து நைட்ரஜன் வாயுவை அதிக அளவில் சுவாசிக்கச் செய்யும். பின்னர் அவர் சுயநினைவை இழந்து இறந்து விடுவார்.

மேலும், இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இதற்கு ஆதரவு இருந்தாலும் எதிர்ப்புகளும் உள்ளன. சிறு விடயங்களுக்கு கூட இந்த முடிவை எடுத்துக் கொள்ளலாம் என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...