tamilnaadi 25 scaled
இலங்கைசெய்திகள்

ஜோர்தானில் சம்பளமின்றி தவிக்கும் இலங்கையர்கள்

Share

ஜோர்தானில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை மற்றும் அவர்களது குடியிருப்பு மற்றும் வேலை அனுமதிகள் புதுப்பிக்கப்படவில்லை என அம்மானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஜோர்டானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தூதரகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால், இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த 296 தொழிலாளர்களில், 41 தொழிலாளர்கள் சம்பள நிலுவைத் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்புக் கோரிக்கைகளைப் பெற்ற பின்னர், இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் இரண்டு தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 தொழிலாளர்களை, ஜோர்டானில் உள்ள மற்ற ஆடைத் தொழிற்சாலைகளில் அவர்களது ஒப்புதலுடன் மீண்டும் பணியமர்த்தவும் தூதரகம் இணங்கியுள்ளது.

மேலும், எஞ்சியுள்ள தொழிலாளர்களை அவர்களது சம்பள நிலுவைகள் மற்றும் பிற உரிமைகளை பெற்றுக்கொடுத்து விரைவாக நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஜோர்டானிய அதிகாரிகள், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...