OIP 18
உலகம்செய்திகள்

பிரான்ஸ் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டதுமே உருவாகியுள்ள சர்ச்சை

Share

பிரான்சின் புதிய பிரதமராக, முன்னாள் கல்வித்துறை அமைச்சரான கேப்ரியல் அட்டால் என்பவர், ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் பொறுப்பேற்றதுமே சமூக ஊடகங்களில் அவருக்கெதிரான கருத்துக்கள் பரவி சர்ச்சையை உருவாக்கி வருகின்றன.

பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கேப்ரியல், யூத குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தை யூதர், அவரது தாய் கிறிஸ்தவர்.

கேப்ரியலும் கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெற்றவர். ஆனால், கேப்ரியலின் தந்தை, நீ உன் வாழ்நாள் முழுவதும் யூதனாகத்தான் பார்க்கப்படுவாய் என்றும், உன் பெயரின் இரண்டாவது பகுதியிலுள்ள பெயர் யூத பெயர் என்பதால், எப்போதும் யூத எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் கேப்ரியல்.

கேப்ரியலின் தந்தை கூறியது உண்மையாகிவிட்டது. ஆம், சமுக ஊடகங்களில் கேப்ரியலுக்கு எதிரான யூத வெறுப்பு கருத்துக்கள் வெளியாகிவருகின்றன.

கேப்ரியல் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுவருவதை, பிரான்ஸ் யூத மாணவர்கள் யூனியன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இப்படி விமர்சிப்பவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...

Untitled
செய்திகள்இந்தியா

இந்தியாவின் மாபெரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்: 30 இலட்சம் அதிகாரிகள் களமிறக்கம்!

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், ஒவ்வொரு தனிநபரையும் கணக்கெடுக்கும் பத்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும்...