tamilni 157 scaled
உலகம்செய்திகள்

ரூ.328 கோடி அபராதம் செலுத்திய பிரபல தொழிலதிபர்.., பின்னணியில் இருக்கும் கார் விவகாரம்

Share

பிரபல தொழிலதிபர் 142 வெளிநாட்டுக்கார்களை மதிப்பு குறைத்து இறக்குமதி செய்ததற்காக ரூ.328 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த தொழிலதிபரும், ரேமாண்ட் குரூப் நிர்வாக இயக்குநருமானவர் கெளதம் சிங்கானியா (Gautam Singhania). இவர், அண்மையில் தனது மனைவி நவாஸ் மோடியை பிரிவதாக அறிவித்தார். பின்னர், இருவரும் சொத்துக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் Gautam Singhania, மும்பை கம்பல்லா ஹில்லில் இருக்கும் ஜெ.கே.ஹவுசில் கார் மியூசியம் வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக உலகம் முழுக்க கார்களை வாங்கி இறக்குமதி செய்து வருகிறார். ஏற்கனவே, இவரிடம் 138 விண்டேஜ் கார்கள் உள்ளது.

இந்நிலையில், இவர் மீது வெளிநாட்டுக்கார்களை மதிப்பு குறைத்து இறக்குமதி செய்தததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2018 -21 -ம் ஆண்டுகளில் ரேமாண்ட் குரூப் வெளிநாடுகளில் கார்களை ஏலத்தில் எடுத்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது. அப்போது ரூ.229.72 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக நேரடிவரி புலனாய்வுத்துறை Gautam Singhania -க்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ரூ.229.72 கோடி அபராதமும், அதனுடன் வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.328 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. பின்னர், ஜெ.கே.இன்வெஸ்மென்ட் நிறுவனம் சார்பாக ரூ.328 கோடி அபராத தொகை செலுத்தப்பட்டது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...