tamilni 148 scaled
இலங்கைசெய்திகள்

யுக்திய என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தும் நடவடிக்கை

Share

போதைப்பொருளுக்கு எதிராக நாடு முழுவதிலும் பொலிஸார் மேற்கொண்டு வரும்“ யுக்திய” நடவடிக்கைகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சித்திரவதை ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 ஜனவரி 3ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதியை முதலில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள், பின்னர் அதில் பயணித்த ஒரு இளைஞனையும் யுவதியையும் விசாரித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அங்கு இளைஞர் உடல் ரீதியான துன்புறுத்தப்பட்டதாக அவரின் தந்தையான ஜெரால்ட் சேரம் என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்த தகவலின்படி, தமது மகனின் காற்சட்டையை முதலில் பொலிஸார் கழற்றுமாறு கூறியுள்ளதுடன் அணிந்திருந்த உள்ளாடையையும் கழற்றுமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர்.

இதன்போது தமது மகனின் காற்சட்டைப் பையில் இருந்த கத்தரிக்கோலில் ஹசீஸ் போதைப்பொருளின் வாசம் வீசியமை தொடர்பிலேயே அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் தமது மகன் நகங்களை வெட்டுவதற்காக எப்போதும் தமது காற்சட்டை பையில் கத்தரிக்கோலை வைத்திருப்பது வழக்கம் என்று தந்தையான ஜெரால்ட் கூறியுள்ளார்.

கத்தரிக்கோலில் ஹசீஸ் வாசம் வருவதாக பொலிஸார் கூறினால், ஏன் அதனை இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...