tamilni 148 scaled
இலங்கைசெய்திகள்

யுக்திய என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தும் நடவடிக்கை

Share

போதைப்பொருளுக்கு எதிராக நாடு முழுவதிலும் பொலிஸார் மேற்கொண்டு வரும்“ யுக்திய” நடவடிக்கைகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சித்திரவதை ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 ஜனவரி 3ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதியை முதலில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள், பின்னர் அதில் பயணித்த ஒரு இளைஞனையும் யுவதியையும் விசாரித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அங்கு இளைஞர் உடல் ரீதியான துன்புறுத்தப்பட்டதாக அவரின் தந்தையான ஜெரால்ட் சேரம் என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்த தகவலின்படி, தமது மகனின் காற்சட்டையை முதலில் பொலிஸார் கழற்றுமாறு கூறியுள்ளதுடன் அணிந்திருந்த உள்ளாடையையும் கழற்றுமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர்.

இதன்போது தமது மகனின் காற்சட்டைப் பையில் இருந்த கத்தரிக்கோலில் ஹசீஸ் போதைப்பொருளின் வாசம் வீசியமை தொடர்பிலேயே அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் தமது மகன் நகங்களை வெட்டுவதற்காக எப்போதும் தமது காற்சட்டை பையில் கத்தரிக்கோலை வைத்திருப்பது வழக்கம் என்று தந்தையான ஜெரால்ட் கூறியுள்ளார்.

கத்தரிக்கோலில் ஹசீஸ் வாசம் வருவதாக பொலிஸார் கூறினால், ஏன் அதனை இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...