1200870 world 01
உலகம்ஏனையவைசெய்திகள்

மர்ம நபர்களின் திடீர் துப்பாக்கிச்சூடு! 4 பேர் பரிதாப பலி, மூவர் கவலைக்கிடம்

Share

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதி Sadda Bazzar.

இங்கு திடீர் துப்பாக்கிச்சூடு நடந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார் மற்றும் பயணிகள் கோச் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். எந்த அமைப்பும் இந்த வன்முறை செயலுக்கு உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.

எனினும், பொலிஸார் இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய நபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கைபர் பக்துன்க்வா பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் இது மற்றுமொரு சம்பவமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் (2023) மட்டும், இப்பகுதி 419 பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தது. இதில் 620 பேர் உயிரிழந்தனர் மற்றும் 977 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...