24 65997e63eff02
உலகம்செய்திகள்

கொதிக்கும் கேரமல் தொட்டியில் உயிருடன் சமாதியான பெண்: சொக்லெட் தொழிற்சாலையில் கோர சம்பவம்

Share

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் சொக்லெட் தொழிற்சாலையில் பெரிய கேரமல் தொட்டி ஒன்றில் தவறி விழுந்து ஊழியர் ஒருவர் உயிருடன் சமாதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் ஊழியரின் கால்கள் திடீரென்று வெளியே தெரிந்த நிலையிலேயே சக ஊழியர்கள் நடந்த சம்பவத்தை உணர்ந்துள்ளனர். 36 வயதான Natalia Nemets என்பவரே, கேரமல் தொட்டியில் விழுந்து உயிருடன் உடல் வெந்து இறந்தவர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து போன சக ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர். கேரமல் தொட்டியை Natalia Nemets சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, திடீரென்று கொதிக்கும் சொக்லெட் அந்த தொட்டிக்குள் கொட்டப்பட்டுள்ளது.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் Natalia Nemets கத்தவோ உதவிக்கு அழைக்கவோ இல்லை என்றும், இதனால் சக ஊழியர்களுக்கு இந்த விபத்து குறித்து தெரியாமல் போனது என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த பெரிய தொட்டியில் உள்ள மொத்த சொக்லெட்டும் வெளியே கொட்டப்பட்டு, அதன் பின்னர் அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது Natalia Nemets அவரது இருக்கையில் இல்லை என்பதை சக ஊழியர்கள் உறுதி செய்திருந்தாலும், அவர்கள் கேரமல் தொட்டியில் தவறி விழுந்துள்ளார் என்பதை கண்டுபிடிக்க தவறியுள்ளதாகவே கூறப்படுகிறது.

அந்த கோரம் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து யாராலும் விளக்க முடியவில்லை. நடாலியா உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லாமல் போனது என குறிப்பிட்டுள்ளனர்.

2017ல் நடந்த இச்சம்பவத்தில் விசாரணையை முடித்துள்ள அதிகாரிகள், நடாலியா மயக்கமடைந்து கேரமல் தொட்டிக்குள் விழுந்திருக்கலாம் என்றும், அல்லது சுத்தம் செய்யும் போது அவர் தவறி விழுந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...