R 10 scaled
செய்திகள்

நடுவானில் வானில் பறந்த விமானத்தின் கதவு: அலறிய பயணிகள்: அடுத்து நடந்தது என்ன?

Share

நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தின் கதவு திடீரென திறந்ததால் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் அலாஸ்கா விமான நிறுவனத்தின் போயிங் 737-9 MAX விமானம்(Boeing 737 Max Flight) போர்ட்லேண்டில் இருந்து ஒண்டாரியோ-வுக்கு புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது யாரும் எதிர்பாராத வகையில், நடுப்பகுதியில் இருந்த வெளியேறும் கதவு திடீரென திறந்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.

இந்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டது, அவர் உடனடியாக விமானத்தை போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையில் விமானத்தின் கதவு திறந்த பயங்கர காட்சியை சில பயணிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த எதிர்பாராத விபத்து எவ்வாறு நடைபெற்று என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என அலாஸ்கா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு அமைப்பு ஒன்று, விமானம் 16, 325 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.

கிளீனராக தொடங்கிய வாழ்க்கை: ரூ.3.06 லட்சம் கோடிக்கு சொந்தக்காரரான தடாஷி யானாய்
கிளீனராக தொடங்கிய வாழ்க்கை: ரூ.3.06 லட்சம் கோடிக்கு சொந்தக்காரரான தடாஷி யானாய்
விமான பயணிகள் சிலர் வெளியேறும் கதவு முற்றிலுமாக விமானத்தை விட்டு தனியாக விலகி சென்றதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....