tamilni 84 scaled
இலங்கைசெய்திகள்

குற்ற விசாரணைப்பிரிவின் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் அதிருப்தி

Share

குற்ற விசாரணைப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் குறித்தே அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பில் திருப்திக்கொள்ள முடியாது என அவர் விசாரணை அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் நிலைமையை அறிந்துக்கொள்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் நேற்று குற்ற விசாரணைப்பிரிவிற்கு திடீரென சென்றுள்ளார்.

விசாரணைகள் மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதனால் மேலும் மூன்று பொலிஸ் குழுக்களை பதில் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளுக்காக நியமித்துள்ளார்.

உள்நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த யுக்தி என்னும் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரக் கட்டாவிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் ஹரக் கட்டா சுமார் 4000 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஹரக் கட்டாவிற்கு எதிராக எந்தவொரு போதைப்பொருள் கடத்தல் வழக்கும் தாக்கல் செய்யப்படாமை ஆச்சரியமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...