tamilni 70 scaled
உலகம்செய்திகள்

புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில்… நிறைவேறிய நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்புகளில் ஒன்று

Share

2024 பிறந்து சில மணி நேரத்தில் நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்புகளில் ஒன்று நிறைவேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவஞானியான நோஸ்ட்ராடாமஸ், ஜேர்மனியின் அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் 2019ல் கோவிட் தொற்றுநோய் தொடர்பிலும் துல்லியமாக கணித்த பெருமைக்குரியவர்.

தற்போது புத்தாண்டில் ஜப்பான் நாட்டை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் தொடர்பிலும் அவர் கணிப்பு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. 7.6 ரிக்டர் அளவில் பதிவான அந்த நிலநடுக்கத்தில் சிக்கி, இதுவரை 62 பேர்கள் பலியாகியுள்ளனர்.

நோஸ்ட்ராடாமஸ் தமது 2024 குறித்த கணிப்பில், வறண்ட பூமி மேலும் வறண்டு, பெரும் வெள்ளம் ஏற்படும் என குறிப்பிட்டிருந்துள்ளார். மேலும், மிக மோசமான நிலநடுக்கத்திற்கு பிறகு பேரலை மொத்தமாக நிலப்பரப்பை சூழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2024ல் சீனாவுடன் மோதல் ஏற்படும் என்றும், அரச குடும்பம் ஒன்றில் குழப்பம், கலக்கம் ஏற்படும் என்றும் காலநிலை மாற்றத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. உயிர் பிழைத்தவர்கள் தெருக்களில் கடும் குளிரை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தற்போது சடலங்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து சில இடங்களில் 3 அடிக்கு மேல் அலைகள் எழும்பின.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் முதல் 72 மணி நேரம் மிக முக்கியம் என்றும், அதன் பின்னர் உயிர் தப்பியவர்களின் எண்ணிக்கை சருவடையும் என்றும் நிபுணர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...