tamilni 38 scaled
உலகம்செய்திகள்

லண்டனில் புத்தாண்டு இரவில் ஏற்பட்ட சோகம்: உயிரிழந்த சிறுவனின் விவரங்களை வெளியிட்ட பொலிஸார்

Share

லண்டனில் புத்தாண்டு இரவில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவனின் பெயரை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணியளவில் லண்டனின் ப்ரிம்ரோஸ் மலைப் பகுதியில் அனைவரும் புத்தாண்டை வரவேற்க காத்து கொண்டு இருந்த வேளையில், 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி தாக்கப்பட்டு இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனை மீட்டு தேவையான முதலுதவி சிகிச்சைகளை செய்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புத்தாண்டு இரவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சிறுவனின் பெயர் ஹரி பிட்மேன் என்று பொலிஸார் தரப்பு தெரிவித்துள்ளது.

ஹரி பிட்மேன் தன்னுடைய நண்பர்களுடன் புத்தாண்டை வரவேற்பதற்காக ப்ரிம்ரோஸ் மலைப் பகுதியில் இருந்துள்ளார், அப்போது ஹரி பிட்மேன் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் விளைவாக மிகவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான 16 வயது சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் தற்போது வடக்கு லண்டன் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம்: ஜோர்தான் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில், ஜோர்தான் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த...

ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...