tamilni 27 scaled
இலங்கைசெய்திகள்

சஜித் கூட்டணியில் இணையும் மொட்டுக்கட்சியினர்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பரந்த கூட்டணியில் இணைந்து செயற்படும் நோக்கத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுஜன பெரமுனவில் இருந்து குறித்த இருவரும் வெளியேறிய பின் அவர்கள் அங்கம் வகித்த அணியின் தலைவரான டளஸ் அழகப்பெரும இன்னும் எதிர்க்கட்சி கூட்டணியில் இணையும் நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஜி.எல்.பீரிஸ், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த கூட்டணியின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, தாம் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வரவிருக்கும் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூட்டணியை விரைவாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...