tamilnaadi 4 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Share

நாட்டில் நிலவும் உயர் பணவீக்கம் காரணமாக, தினசரி எரிபொருள் விற்பனை சுமார் 40% குறைந்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் பொருளாதாரம் சாதாரண நிலையில் இருந்த போது நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரம் மெற்றிக் தொன் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் அளவு சுமார் இரண்டாயிரம் மெற்றிக் தொன்களாகவும், டீசல் விற்பனை சுமார் 1800 மெற்றிக் தொன்களாகவும் குறைந்துள்ளது.

இதேவேளை, சாதாரண நிலைமைகளின் போது நாளொன்றுக்கு சுமார் 4800 மெற்றிக் தொன் டீசல் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது நாளொன்றுக்கு சுமார் 3000 மெற்றிக் தொன் டீசல் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் முதலாம் திகதி VAT வரி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் எரிபொருள் விற்பனை மேலும் வீழ்ச்சியடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், எரிபொருள் விற்பனை குறையும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...