tamilni 479 scaled
உலகம்செய்திகள்

38,000 அடி உயரத்திலிருந்து திடீரென கீழ் இறங்கிய விமானம்

Share

38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று திடீரென கீழ் இறங்கியதால் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி 225 பயணிகளுடன் ஏர்பஸ் விமானமொன்று புறப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரம் வானில் பறந்துகொண்டிருந்த நிலையில், காற்றில் ஏற்பட்ட திடீர் மாறுபாடு காரணமாக விமானம் திடீரென கீழ் நோக்கி இறங்கியுள்ளது.

மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம், இரண்டு மணி நேரமாக பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென செங்குத்தாக கீழ் நோக்கி இறங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் 11 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன், உடனடியாக விமானி விமானத்தை அருகிலுள்ள பெர்முடா தீவில் தரையிறக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீடு திரும்ப வேண்டிய பயணிகள் அனைவரும் விமான நிறுவனம் ஏற்பாடு செய்த ஹோட்டல்களில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...