OIP
உலகம்செய்திகள்

லண்டனில் பூமா மற்றும் Zara நிறுவனங்களின் கடைகளை மூட வைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

Share

லண்டனில் பூமா மற்றும் Zara நிறுவனங்களின் கடைகளை மூட வைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனை களைகட்டிவரும் நிலையில் லண்டனின் பிரபலமான ஷொப்பிங் பகுதியில் அமைந்துள்ள பூமா மற்றும் Zara கடைகளை பாலஸ்தீன ஆதரவாளர்கள் மூட வைத்துள்ளனர்.

தொடர்புடைய இரு கடைகள் மட்டுமின்றி, ஆக்ஸ்போர்டு வீதி மற்றும் ரீஜண்ட் வீதியில் அமைந்துள்ள கடைகள் பல சனிக்கிழமை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறைந்தது ஆயிரம் பேர்கள் கொண்ட குழு ஒன்று பாலஸ்தீன ஆதரவு பேரணியை இந்த இரு வீதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். காஸா மக்கள் வெடிகுண்டுக்கு இலக்காகும் நிலையில், இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களின் கடைகளில் இருந்து எவரும் பொருட்கள் வாங்குவது முறையல்ல என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களிடம் கோரியுள்ளனர். இனப்படுகொலையை ஆதரிக்கும் Zara, இன்னும் ஒளிந்திருக்க முடியாது என்றும் முழக்கமிட்டுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் Zara வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று, காஸா மக்களை கேலி செய்வதாக உள்ளது என குறிப்பிட்டு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த விளம்பரத்தை Zara நிறுவனம் நீக்கியது.

இதேப்போன்று பூமா கடைகள் முன்பும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரையில், இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்கள் மூடப்படும் என்றே பாலஸ்தீன ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...