tamilnid 15 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் நாட்டு மக்கள்

Share

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் நாட்டு மக்கள்

பணவீக்கம் அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வீதம் அடுத்த வருடத்தில் 5 வீதத்திற்குள் வைத்துக் கொள்வதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும் இவ்வாறான பணவீக்கத்தை நாட்டு மக்களால் தாங்க முடியுமா என்பது நிச்சயமற்றது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

தற்போதைய 1.6 சதவீத பணவீக்கத்தின் கீழ் கூட மக்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அளவுகள் தற்போது உச்சத்தை எட்டியுள்ளதாகவும், மேலும் அதிகரிக்க எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட 97 வகையான பொருட்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 18 சதவீத புதிய VAT விதிக்கப்படவுள்ளதுடன், ஏனைய பொருட்களுக்கான வரியும் 3 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.

இந்த வரி விதிப்பினால் இலங்கை மத்திய வங்கியின் பணவீக்கத்தை 5 வீதமாக பேண முடியுமா என்பது சந்தேகம் என கூறும் பேராசிரியர் மேலும் 5 வீதம் பணவீக்கம் ஏற்பட்டாலும் மக்கள் அதை சமாளிப்பது கடினம்.

எனவே, தற்போதைய பணவீக்க அளவை 1 சதவீதமாக குறைக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...