rtjy 125 scaled
இலங்கைசெய்திகள்

யுக்திய சுற்றிவளைப்பில் இலட்சக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்

Share

யுக்திய சுற்றிவளைப்பில் இலட்சக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்]

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையின் ஊடாக 2938 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பொலிஸார் யுக்திய என்னும் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் வரையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களின் ஊடாக 2938.73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் 1427 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1370 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள், கட்டடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைப்பற்றப்பட்டுள்ள தங்கத்தின் மொத்த பெறுமதி 140.5 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19 ஆம் திகதி முதல் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அடையாளம் காணப்பட்டுள்ள பிரதான போதைப்பொருள் வர்த்தகர்கள் 109 பேரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...