rtjy 122 scaled
இலங்கைசெய்திகள்

தமிழக கடற்றொழிலாளர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்

Share

தமிழக கடற்றொழிலாளர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்

பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 25 தமிழக கடற்றொழிலாளர்களுக்கான விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி 2 படகுகளுடன் நாகப்பட்டினத்தை சேர்ந்த 25 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த 25 கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளினால் இன்று (22) பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையினை மன்றில் தாக்கல் செய்வதற்கு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து வரும் டிசம்பர் 28 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டு அதுவரை 12 கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

13 கடற்றொழிலாளர்களுக்கு நிபந்தனையுடனான விடுதலை அறிவிக்கப்பட்டாலும், கடற்படையினரை தாக்கிய வழக்கில் கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கு அமைய கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...