tamilni 404 scaled
உலகம்செய்திகள்

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி

Share

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி

செக் குடியரின் ப்ராக் நகரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் துப்பாக்கியால் 14 பேர்களை கொன்றதுடன், தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

குறித்த கோர சம்பவத்தில் 25 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய அந்த நபரே கடந்த வாரம் வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் குழந்தையின் மரணத்திற்கும் காரணம் என்று நம்பப்படுகிறது.

ப்ராக் நகரில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவ பீடம் மீதே வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் அந்த தாக்குதல்தாரியும் தற்கொலை செய்துகொண்டதாக செக் குடியரசு உள்விவகார அமைச்சர் உறுதி செய்துள்ளார். மேலும், அந்த தாக்குதல்தாரி சார்லஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்று வந்த மாணவன் David Kozak என்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் குடியிருப்பில் அவரது தந்தையின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, அந்த மரணத்திற்கு காரணம் அவரா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டுமின்றி, தமது டெலிகிராம் செயலியில், உலகத்தை தாம் வெறுப்பதாகவும் முடிந்த அளவுக்கு வலிகளை விட்டுச்செல்ல தாம் முடிவெடுத்துள்ளதாகவும் David Kozak பதிவு செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல்கலைக்கழக தாக்குதல் சம்பவத்தில், தொடக்கத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், 14க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...