tamilnih 4 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்ப விசாவுக்கான நடைமுறையில் மாற்றம்

Share

பிரித்தானியாவில் குடும்ப விசாவுக்கான நடைமுறையில் மாற்றம்

பிரித்தானியவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அண்மையில் பிரித்தானியாவில் புலம்பெயர்தலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் சில கடுமையான நடைமுறைகளை விதித்திருந்தது.

அதன்படி வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்ப உறுப்பினரையோ அல்லது நண்பரையோ பிரித்தானியாவுக்கு அழைத்து வர, குறைந்தபட்சம் ஆண்டுக்கு £38,700 பவுண்டுகள் சம்பாதிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது இந்த முடிவில் சற்று மாற்றம் செய்து ஆண்டுக்கு குறைந்தபட்ச வருமானம் £29,000 பவுண்டுகள் பெற வேண்டும் என அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த மாற்றம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

புதிய விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த மாற்றங்கள் பொருந்தும் என்றும், ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ளவர்கள் தற்போதைய, மிகக் குறைந்த, வருமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது குடும்ப உறுப்பினர் ஒருவரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர வேண்டுமெனில் அவரின் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியம் £18,600 பவுண்டுகளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...