tamilnih 2 scaled
இலங்கைசெய்திகள்

2600 கோடி ரூபாவை வருமானமாக பெற்ற கட்டுநாயக்க விமான நிலையம்

Share

2600 கோடி ரூபாவை வருமானமாக பெற்ற கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இந்தாண்டில் 2600 கோடி ரூபாய் வருமானத்தை பதிவு செய்துள்ளது.

கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​விமான நிலையம் 400 கோடி ரூபா நட்டத்தை சந்தித்தது. எனினும் இந்தாண்டில் இலாபத்தை பதிவு செய்ய முடிந்தது.

மேலும் விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விமான நிலையமாக மாறியுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவத்துள்ளார்.

விமான நிலைய வளாகத்தில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ரேடார் பொருத்துதல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விமான நிலையத்திற்கு சொந்தமான பணத்தில் அதற்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப விமான நிலையத்தின் பாதுகாப்பை போன்று எமது வான் வலயத்தின் பாதுகாப்பையும் உருவாக்க முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகளவான ரஷ்ய சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், விமான நிலையத்தின் நஷ்டம் ஓரளவுக்கு குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...