tamilni 320 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விவசாயத்தில் புரட்சி செய்த விவசாயி

Share

இலங்கையில் விவசாயத்தில் புரட்சி செய்த விவசாயி

அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் அறுவடை செய்து சுமார் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளார்.

இவர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மிளகாய்ச் செய்கையின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரை ஏக்கரில் மிளகாய்ச் செய்கையை ஆரம்பித்துள்ளார்.

முன்னதாக மிளகாய்ச் செய்கையில் அதிக அறுவடை வருமானம் பெற்ற இரண்டு விவசாயிகள் அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருந்ததுடன் அவர்கள் 50 முதல் 60 இலட்சம் வருமானத்தை பெற்றனர்.

ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட புளியங்குளத்தை சேர்ந்த பந்துல காமி என்பவர் 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய மிளகாயின் சந்தை விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஜனவரி மாதம் 14 வரை மிளகாய் அறுவடை செய்ய முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...