2 13 scaled
உலகம்செய்திகள்

அதிவேகமாக வந்து உணவகத்திற்குள் புகுந்த லொறி! 4 பேர் உடல் நசுங்கி பலி

Share

அதிவேகமாக வந்து உணவகத்திற்குள் புகுந்த லொறி! 4 பேர் உடல் நசுங்கி பலி

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த லொறி, சாலையோர உணவகத்திற்குள் புகுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் இடாவாஹ் மாவட்டத்தில் கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் பாரிய விபத்து ஏற்பட்டது.

சாலையோர உணவகத்தில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று அதிவேகத்தில் வந்து உணவத்திற்குள் புகுந்தது.

இதில் உணவக உரிமையாளர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவம் இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

முன்னதாக, விபத்தினை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...