rtjy 90 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நபர்

Share

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நபர்

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள ஒருவர், தாக்குதலுக்கு முன் ஒரு மணி நேரம் ஓடும் வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் இந்த வாரத் துவக்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்து காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்துவதற்கு முன் அவர் தாக்குதல் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு மணி நேரம் ஓடும் அந்த வீடியோ, பல ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தன் தவறை நியாயப்படுத்தி பேசும் அந்த நபர், பல ஆண்டுகளாக தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே வீடியோவில், அவர் பின்னர் சுட்டுக்கொன்ற நபர்களின் பெயர்களையும் அவர் முன்னதாகவே குறிப்பிட்டுள்ளார்.

விடயம் என்னவென்றால், அந்த வீடியோவே அவருக்கு எதிரான சாட்சியமாக அமைய உள்ளது. அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதற்கு அந்த வீடியோ உதவக்கூடும் என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...