tamilni 263 scaled
உலகம்செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: ஆப்பிரிக்க நாடொன்றின் அறிவிப்பு

Share

சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: ஆப்பிரிக்க நாடொன்றின் அறிவிப்பு

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து கென்யா சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வில் நைரோபியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பயண நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் மின்னணு பயண அங்கீகாரம் “electronic travel authorization” இருந்தால் கென்யாவிற்கு செல்லலாம் எனவும் உலகெங்கிலும் உள்ள பயணிகள் கென்யாவுக்குச் செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் காங்கோ குடியரசில் நடந்த ஒரு மாநாட்டில் விசா விலக்குகளுக்கான தனது திட்டங்களை ஜனாதிபதி ரூட்டோ முன்னர் கோடிட்டுக் காட்டியிருந்தார்

இதன்படி ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்கள் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விசா இல்லாமல் கென்யாவுக்குச் செல்ல முடியும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கை ஒரு பரந்த முயற்சியை பிரதிபலிப்பதோடு பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

கென்யா, அதன் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடாகும்.

சர்வதேச பார்வையாளர்களின் ஈர்ப்பு அதன் பொருளாதாரத்தின் முக்கிய இயக்கியாக சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது.

இதற்கமைய விசா தேவைகளைத் தள்ளுபடி செய்வதற்கான முடிவு, அதிகமான சர்வதேச பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு இலவச உள்நுழைவு விசாவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...