tamilni 263 scaled
உலகம்செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: ஆப்பிரிக்க நாடொன்றின் அறிவிப்பு

Share

சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: ஆப்பிரிக்க நாடொன்றின் அறிவிப்பு

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து கென்யா சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வில் நைரோபியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பயண நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் மின்னணு பயண அங்கீகாரம் “electronic travel authorization” இருந்தால் கென்யாவிற்கு செல்லலாம் எனவும் உலகெங்கிலும் உள்ள பயணிகள் கென்யாவுக்குச் செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் காங்கோ குடியரசில் நடந்த ஒரு மாநாட்டில் விசா விலக்குகளுக்கான தனது திட்டங்களை ஜனாதிபதி ரூட்டோ முன்னர் கோடிட்டுக் காட்டியிருந்தார்

இதன்படி ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்கள் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விசா இல்லாமல் கென்யாவுக்குச் செல்ல முடியும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கை ஒரு பரந்த முயற்சியை பிரதிபலிப்பதோடு பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

கென்யா, அதன் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடாகும்.

சர்வதேச பார்வையாளர்களின் ஈர்ப்பு அதன் பொருளாதாரத்தின் முக்கிய இயக்கியாக சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது.

இதற்கமைய விசா தேவைகளைத் தள்ளுபடி செய்வதற்கான முடிவு, அதிகமான சர்வதேச பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு இலவச உள்நுழைவு விசாவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...