tamilni 200 scaled
உலகம்செய்திகள்

இந்திய வம்சாவளி ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை மிரட்டல்: பரப்புரை கூட்டத்தில் பரபரப்பு

Share

இந்திய வம்சாவளி ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை மிரட்டல்: பரப்புரை கூட்டத்தில் பரபரப்பு

இந்திய வம்சாவளி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக களத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி. இவரையும், இவருக்கு ஆதரவாக பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்பவர்களையும் கொலை செய்ய இருப்பதாக ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

நியூ ஹாம்ப்ஷயர், டோவர் பகுதியை சேர்ந்த 30 வயது Tyler Anderson என்பவர் இந்த வழக்கில் உள்ளூர் நேரப்படி திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பதிவு செய்ததாக உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டு குறுந்தகவல்களில், அவர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அமெரிக்க நீதித்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவேக் ராமசாமியின் பரப்புரை நிர்வாகிகள் விரைவாகச் செயல்பட்டதாக FBI தாக்கல் செய்துள்ள வாக்குமூலம் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த குறுந்தகவல் குறித்து பொலிசாருக்கு உடனடியாக புகார் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண் ஆண்டர்சனுக்கு தொடர்புடையது என்ற முக்கிய தகவல்களையும் பரப்புரை நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இதுவே ஆண்டர்சனை கைது செய்ய உதவியதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல் விடுத்த ஆண்டர்சனை கைது செய்வதில் விரைந்து நடவடிக்கை எடுத்த சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஆண்டர்சன் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மூன்று ஆண்டுகள் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் $250,000 வரை அபராதம் ஆகியவற்றை எதிர்கொள்கிறார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...