tamilni 170 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மரணித்த மனிதாபிமானம்!

Share

இலங்கையில் மரணித்த மனிதாபிமானம்!

பூகொட பிரதேசத்தில் லொறியுடன் மோதி காயமடைந்த 83 வயதுடைய முதியவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி , இடைநடுவே கைவிட்டு சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில், பூகொட பாப்பிலியாவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியால் வீதியில் விட்டுச்செல்லப்பட்ட முதியவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பூகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது 83 வயதுடைய முதியவர் மீது லொறி மோதியதுடன், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி லொறி சாரதி அவரை லொறியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இருப்பினும், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் காயமடைந்த முதியவரை இறக்கிவிட்டு லொறியின் சாரதி தப்பியோடிய விதம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதன்படி, தப்பியோடிய நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பூகொட பொலிஸார் ஆரம்பித்த நிலையில், பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பூகொட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...