tamilni 158 scaled
இலங்கைசெய்திகள்

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமை

Share

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமை

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது (10.12.20232) வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை, உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம் எனவும் எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் நீதி இல்லை எனவும் இதனால் எதற்கு இந்த மனித உரிமைகள் தினம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவினர்கள் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரித்துள்ளனர்.

அத்துடன் தனது மகனை விடுவிக்க கடற்படை அதிகாரி 15 இலட்சம் ரூபா கப்பம் கேட்டதுடன் இது தொடர்பான பற்று சீட்டினை கிழித்துவிட்டனர் என தாய் ஒருவர் இதன் போது கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தனது கருத்துகளை எழுதிய பல பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக...

500x300 20809002 tvkvijay29102025
செய்திகள்இந்தியா

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு...

Aswasuma Welfare benifits Board 1200px 2023 07 11 1000x600 1
செய்திகள்இலங்கை

அஸ்வெசும’ பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கின்மையால் சலுகைகள் கிடைக்கவில்லை – கணக்காய்வு அறிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான...

ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...