tamilni 158 scaled
இலங்கைசெய்திகள்

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமை

Share

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமை

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது (10.12.20232) வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை, உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம் எனவும் எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் நீதி இல்லை எனவும் இதனால் எதற்கு இந்த மனித உரிமைகள் தினம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவினர்கள் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரித்துள்ளனர்.

அத்துடன் தனது மகனை விடுவிக்க கடற்படை அதிகாரி 15 இலட்சம் ரூபா கப்பம் கேட்டதுடன் இது தொடர்பான பற்று சீட்டினை கிழித்துவிட்டனர் என தாய் ஒருவர் இதன் போது கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தனது கருத்துகளை எழுதிய பல பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...