rtjy 56 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்

Share

கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகத்தை நாளை மறுதினம் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை இருந்து உணவு உட்கொள்ள முடியும்.

இந்த உணவகம் நாளை மறுதினம் மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் .திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த உணவகம் பகல் மற்றும் இரவு உணவிற்காக திறந்திருக்கும், அதற்கமைய, சுழலும் உணவகம் மதிய உணவிற்காக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் இரவு உணவிற்காக மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த பார்வையாளர்கள் மூலம் 14 மாத காலப்பகுதிக்குள் 1025.9 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
23 7
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: கைவிடப்படும் ஆயிரக்கணக்கான செல்லப்பிராணிகள் – ‘மறைக்கப்பட்ட பலிகள்’ என எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர்ச் சூழலால், மக்கள் இடம்பெயர்வது...

22 10
உலகம்செய்திகள்

ஈரானுடனான போர்: முதல் ஆறு நாட்களில் 11 பில்லியன் டாலர் செலவு – அமெரிக்க செனட்டர் தகவல்!

ஈரானுடனான மோதலின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தது 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக...

21 10
செய்திகள்உலகம்

பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வரும் நாசாவின் ‘வான் ஆலன் ப்ரோப் ஏ’ விண்கலம்!

2012-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட, 600 கிலோ (1,300 பவுண்டுகள்) எடையுள்ள நாசாவின் ‘வான் ஆலன்...

20 11
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் விலை உயர்வு: அரசாங்கத்திற்கு ரூ. 7.1 பில்லியன் கூடுதல் வருமானம் – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வினால், அரசாங்கம் சுமார் 7.1 பில்லியன் ரூபா மேலதிக வருவாயைப்...