உலகம்செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல் தீட்டியுள்ள புதிய திட்டம்!

Share

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல் தீட்டியுள்ள புதிய திட்டம்!

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தத்தின் பின்னர் ஹமாஸ் படையினரின் ரகசிய சுரங்கப்பாதைகளுக்குள் கடல் நீரை நிரப்ப இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தமானது முடிவு பெறாத நிலையில் அண்மையில் 7 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கமைய இஸ்ரேல் புதிய போர் திட்டமொன்றை தீட்டியுள்ளது.

அதாவது காசா பகுதியில் ஹமாஸ் படையினர் பெரிய பலமாக இருக்கும் ரகசிய சுரங்கப்பாதைகளில் கடல் நீரை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய தரைக்கடலின் நீரை கொண்டு கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஹமாஸின் ரகசிய சுரங்கப்பாதையை நிரப்பபுவதற்கு சில வாரங்களாவது எடுக்கும்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை நிலத்தடிக்கு அனுப்பும் திறன் கொண்ட ஐந்து மோட்டார்களை வடிவமைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனினும் இந்த திட்டத்தின் மூலம் காசாவிலுள்ள நல்ல தண்ணீர் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த திட்டத்தை இஸ்ரேல் நடைமுறைபடுத்தினால் பல உலக நாடுகளின் கண்டனங்களை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...