tamilni 35 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பான தி.மு.க எம்.பி தமிழச்சியின் கருத்துக்கு கண்டனம்

Share

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பான தி.மு.க எம்.பி தமிழச்சியின் கருத்துக்கு கண்டனம்

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்காக மறைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் மன்னிப்புக் கேட்பதாக தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறிய கருத்துக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செவ்வியொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அதில், நீங்கள் எந்த வரலாற்று ஆளுமையுடன் அமர்ந்து உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்று கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதன்போது இந்த கேள்விக்கு பதிலளித்த அவர், மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றும் பதிலளித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து அவரிடம் என்ன பேசுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு மன்னிப்பு கேட்பேன்” என்றும் பதிலளித்துள்ளார்.

இலங்கை முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது 2009 ஆம் ஆண்டு நாட்டின் உள்நாட்டுப் போரின் போது பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கின்றது.

தமிழச்சி தங்கப்பாண்டியனின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரமங்கலம் தனது X பக்கத்தில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பான ஐ.நா குழு அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார்.

அதில் விடுதலைப்புலிகள் இயக்கம் “பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுத்ததாகவும், தொடர்ந்து மனித தடுப்புகளாக இருந்ததாகவும் கூறியுள்ளது.

மேலும், “இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரமும் தங்கபாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த நாளையொட்டி தமிழச்சி தங்கபாண்டியனின் பேட்டி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...