tamilni 31 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரித்த மதுவரி திணைக்களத்தின் வருமானம்

Share

அதிகரித்த மதுவரி திணைக்களத்தின் வருமானம்

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாத வருமானம் 1 பில்லியன் ரூபாய்கள் உயர்வடைந்துள்ளதாக நாடாளுமன்றக் குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த போலி ஸ்டிக்கர்களை சோதனை செய்யும் நடவடிக்கையின் பின்னரே இந்த வருமானம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மதுவரித்திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவின் முன் அழைக்கப்பட்டன.

இந்த சந்திப்பின்போதே மதுவரி திணைக்களத்தின் வருமான அதிகரிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வரிக் கோப்புகளின் எண்ணிக்கை தற்போது 7 இலட்சம் எனவும், எதிர்காலத்தில் இது 10 இலட்சம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...