3 17 scaled
உலகம்செய்திகள்

7 வயது மகளுக்கு நேர்ந்த வன்கொடுமை.., உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

Share

7 வயது மகளுக்கு நேர்ந்த வன்கொடுமை.., உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

இந்திய மாநிலம், கேரளாவில் 7 வயது மகள் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவர் தனது 7 மற்றும் 11 வயது மகள்களுடன் கணவரை பிரிந்து மற்றொரு ஆணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் 7 வயது மகளை ஆண் நண்பர் பல முறை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதுகுறித்து, 7 வயது மகள் தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு, இது பொதுவான விஷயம் என்றும், யாரிடமும் இது பற்றி தெரிவிக்கக் கூடாது கூடாது என்றும் சிறுமியிடம் தாய் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பல முறை 7 வயது மகளை வன்கொடுமை செய்ய அந்த ஆண் நண்பருக்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனால், 7 வயது சிறுமி தனது 11 வயது சகோதரியிடம் தனக்கு நடந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார். அதற்கு, தனக்கும் இதுபோல வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், இரண்டு சிறுமிகளும் தனது பாட்டி வீட்டுக்கு தப்பித்துச் சென்று நடந்தது குறித்து கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பாட்டி பொலிஸில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்படி, சிறுமிகளின் தாய் மற்றும் அவருடன் வாழ்ந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் குற்றவாளியான ஆண் நண்பர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், சிறுமிகளின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, விரைவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...