ஜோவிகாவுக்காக செய்த Publicity Stunt -ஆ.. தாக்குதல் பற்றி வனிதா கோபமான பதிவு
நடிகை வனிதா விஜயகுமார் தன்னை ஒரு மர்ம நபர் தாக்கிவிட்டதாக புகைப்படத்துடன் அதிர்ச்சி புகார் கூறி இருந்தார். அதை பற்றி போலிஸ் புகார் அளிக்கவிலை என அவர் கூறினாலும், அவர்கள் தானாக முன்வந்து இந்த சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு பற்றி குறிப்பிட்டு தான் தாக்குதல் நடந்ததாக வனிதா கூறி இருந்தார்.
வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், ‘ஜோவிகா ரொம்ப ஸ்மார்ட், அவரே ஜெயிப்பார். உங்க உதவி அவருக்கு தேவையில்லை’ என பிரதீப் விமர்சித்தார்.
நெட்டிசன்கள் பலரும் வனிதா கூறி இருக்கும் புகார் பற்றி விமர்சித்து வருகின்றனர். அந்த தாக்குதல் பற்றி அவர் ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை என பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது ஜோவிகா வெற்றி பெற publicity stunt என ட்ரோல் செய்பவர்களுக்கு வனிதா பதில் அளித்திருக்கிறார்.
என் மீது தாக்குதல் நடந்தது தெரிந்தால் ஜோவிகா உடனே வெளியில் வந்துவிடுவார் என கூறி இருக்கிறார்.