tamilnih scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர் தொடர்பில் நாடாளுமன்றக்குழு தகவல்

Share

சிறுவர் தொடர்பில் நாடாளுமன்றக்குழு தகவல்

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்று நாடாளுமன்றக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு திட்ட முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது, சிறுவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான ஒரு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசரமான தேவை குறித்து சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் தேவைப்படும் பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான அமைப்பைத் தயாரிப்பது தொடர்பிலும் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் நலனில் கவனம் செலுத்தாமையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கமளித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...