tamilni 352 scaled
இலங்கைசெய்திகள்

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Share

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரது கையில் இருந்த ஆவணத்தை பிடுங்கிச் சென்ற குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தாம் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததன் மூலம் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றிருக்க கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் நடவடிக்கைகளும் ஏற்புடையது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இருவரும் நாடாளுமன்றின் நிலையியற் கட்டளைகளையும், நாடாளுமன்றின் சிறப்பு உரிமைகளையும் மீறி செயற்பட்டு உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே அந்த இருவருக்கு எதிராகவும் தண்டனை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...