rtjy 208 scaled
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலை கடமைகளில் இராணுவத்தினர்

Share

அதிவேக நெடுஞ்சாலை கடமைகளில் இராணுவத்தினர்

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் அரசாங்கத்திற்கு எதிராக சுகயீன விடுமுறையை பதிவு செய்ததன் காரணத்தினால் குறித்த கடமைகளை முன்னெடுக்க இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இன்றையதினம் (22.11.2023) வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் சுகயீன விடுமுறையைப் பதிவுசெய்து பணிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாகவே குறித்த பணிக்கு இராணுவத்தினர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் பூர்வாங்க நடவடிக்கையாக நேற்று (21) பனாகொட இராணுவ முகாமின் உப பிரிவினர், நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவின் ஆலோசனையின் கீழ் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்ததுடன், அதன் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் பேரில், கடமைகளை உள்ளடக்கிய இடங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....