tamilni 292 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மகிந்த, கோட்டாபய, பசிலின் குடியுரிமை பறிக்க வாய்ப்பு

Share

மகிந்த, கோட்டாபய, பசிலின் குடியுரிமை பறிக்க வாய்ப்பு

இலங்கை வங்குரோத்து அடையக் காரணமான கோட்டாபய, மகிந்த, மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பேது சஜித் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

அதற்காக செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதால், விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறித்த குழுவிடம் நட்டஈடு பெற்றுக்கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு ஆதரவாக அனுரகுமார திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் கருத்து வெளியிட்டுள்ளனர். அமைச்சர் பந்துல குணவர்தன அதற்கு எதிராகப் பேசியுள்ளார்.

அங்கு சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது,

நாட்டை வங்குரோத்து அடையச் செய்த கும்பலுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இனியும் இவர்கள் இவற்றைத் தொடர்வார்களா என்று நாடு கேட்கிறது. எனவே, இவர்களுக்கு மேலும் குடியுரிமை வழங்குவது பொருத்தமற்றது.

உச்ச நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட குழுவின் குடியுரிமைகளை இரத்து செய்யும் நடவடிக்கை விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி மட்டுமே செயற்பட முடியும்.

நாட்டின் 200 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சார்பாக ஜனாதிபதி அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் நாங்கள் பரிந்துரைக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...