tamilni 232 scaled
இலங்கைசெய்திகள்

100 பொருட்களுக்கு வட் வரி விதிக்கத் திட்டம்

Share

100 பொருட்களுக்கு வட் வரி விதிக்கத் திட்டம்

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவத் திட்டத்தின் படி, இதுவரை வட் வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு புதிதாக வட் வரி அறவிடப் போகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பான நேற்றைய(15.11.2023) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி 133 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதோடு புதிய வரிகள் ஊடாக 800 பில்லியன் ரூபாயை அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உதாரணமாக சம்பளம் 100 ரூபா அதிகரிக்குமாயின் வரி 600 ரூபாயாக அதிகரிக்கும். வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வரி அறவிடப்போகின்றனர். தொலைபேசி, கணனி, அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் வரி அறவிடப்போகின்றனர்.

அதேநேரம் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் 18 வீதம் வரி அறவிடப்படப் ​போகிறது. தேயிலை கொழுந்து உள்ளிட்ட மேலும் பல பொருட்களுக்கு வட் வரியை அறவிடப்போகின்றனர்.

எனினும் இது எவற்றையும் ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையில் வெளியிடவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...