tamilni 230 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் இந்தியர் படுகொலையில் திருப்பம்

Share

பிரித்தானியாவில் இந்தியர் படுகொலையில் திருப்பம்

பிரித்தானியாவில் வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர் வழக்கில் அதிரடி திருப்பமாக சிறுவர்கள் இருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் பொலிஸார், 19 வயது ஷான் சேஷாய் படுகொலை வழக்கில் 12 வயதான இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் பொலிஸ் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இரு சிறுவர்களும் பொலிஸ் காவலில் உள்ளனர் எனவும், சேஷாய் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த படுகொலை தொடர்பில் தகவல்கள் தெரியவரும் போது பொதுமக்கள், கண்டிப்பாக விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் பொலிஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை தெரிவிக்கையில், தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், ஆனால் அவசர சேவை மருத்துவர்களால் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது எனவும், இளைஞர் சேஷாய் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் ஹர்தீப் கவுர் என்பவர் தெரிவிக்கையில், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தனது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...