tamilni 230 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் இந்தியர் படுகொலையில் திருப்பம்

Share

பிரித்தானியாவில் இந்தியர் படுகொலையில் திருப்பம்

பிரித்தானியாவில் வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர் வழக்கில் அதிரடி திருப்பமாக சிறுவர்கள் இருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் பொலிஸார், 19 வயது ஷான் சேஷாய் படுகொலை வழக்கில் 12 வயதான இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் பொலிஸ் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இரு சிறுவர்களும் பொலிஸ் காவலில் உள்ளனர் எனவும், சேஷாய் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த படுகொலை தொடர்பில் தகவல்கள் தெரியவரும் போது பொதுமக்கள், கண்டிப்பாக விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் பொலிஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை தெரிவிக்கையில், தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், ஆனால் அவசர சேவை மருத்துவர்களால் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது எனவும், இளைஞர் சேஷாய் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் ஹர்தீப் கவுர் என்பவர் தெரிவிக்கையில், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தனது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...