tamilni 223 scaled
இலங்கைசெய்திகள்

டயானாவின் கோரிக்கைக்கு பதில் வழங்கிய நீதிபதி

Share

டயானாவின் கோரிக்கைக்கு பதில் வழங்கிய நீதிபதி

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சமர்ப்பித்த மனுவை விசாரிப்பதற்கு முழு பீடத்தை நியமிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் பொருத்தமான தீர்மானம் வழங்கப்படும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவை நேற்று(15.11.2023) அவர் திறந்த நீதிமன்றில் வழங்கியுள்ளார்.

டயானா கமகேவின் மனுவை முழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்குமாறு கோரி அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி உதித இஹலஹேவா முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதியரசர் குறித்த உத்தரவை அறிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனக் டி சில்வா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்தக் கோரிக்கை நேற்று பரிசீலிக்கப்பட்டது.

டயானா கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி உதித இஹலஹேவா, அரசியல் கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்படுவது தொடர்பில் உச்ச நீதிமன்றம் அண்மையில் பல தீர்மானங்களை அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பிரதிவாதிகள் தமது கட்சிக்காரரை பணிநீக்கம் செய்வதற்கு முன் நியாயமான ஒழுக்காற்று விசாரணையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எனவே இதனை பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதி உரிய மனுவை முழுமையான குழுவின் முன் பரிசீலிக்க உத்தரவிடுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...