tamilni 174 scaled
இலங்கைசெய்திகள்

வரவு செலவு திட்டத்தின் பின் பாரம்பரியத்தை மாற்றிய ரணில்

Share

வரவு செலவு திட்டத்தின் பின் பாரம்பரியத்தை மாற்றிய ரணில்

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிதிகளுக்கு மதிய விருந்தொன்றை வழங்கினார்.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் பாரம்பரிய தேநீர் வைபவத்திற்குப் பதிலாக, ஜனாதிபதி விருந்து வழங்கியுள்ளார்.

நேற்று நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி பிற்பகல் 02.00 மணியுடன் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு நிறைவடைந்தது.

இதையடுத்து மதிய விருந்து வழங்கப்பட்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். எனினும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரம்பரியமாக தேநீர் விருந்து நடத்தப்படும் ஆனால் இம்முறை பிற்பகல் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ஆற்றியதால் மதிய உணவு வழங்கப்பட்டதென கூறப்பட்டுள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...

MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...