rtjy 139 scaled
இலங்கைசெய்திகள்

தனியாருக்கு வழங்கப்படும் அரச கட்டிடங்கள்

Share

தனியாருக்கு வழங்கப்படும் அரச கட்டிடங்கள்

ஹோட்டல் துறைக்கு கையளிக்கப்படும் அஞ்சல் நிலைய கட்டிடங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் நட்டத்தில் உள்ள அஞ்சல் துறைக்கு மாற்றப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா அஞ்சல்; நிலையத்திற்கு மேலதிகமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஹோட்டல் (விருந்தக) திட்டங்களுக்காக தியத்தலாவ மற்றும் காலியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் காலத்தின் இரண்டு அஞ்சல் நிலைய கட்டிடங்களும் கண்டி மற்றும் நுவரெலியாவில் மேலும் மூன்று பழமையான கட்டிடங்களும் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் நகர அபிவிருத்தி அதிகாரசபை, ஏற்கனவே அஞ்சல் மா அதிபரிடம் இருந்து நுவரெலியா அஞ்சலக அலுவலக கட்டிடத்தை பெற்றுள்ளது.

அந்த கட்டிட வளாகம் புதுப்பிக்கப்பட்டு, அஞ்சல் சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும், அதே நேரத்தில் ஒரு ஏக்கர் நிலம் உட்பட மீதமுள்ள பகுதி ஹோட்டலுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதங்கள் மற்றும் பொதிகளை ஒப்படைத்தல் மற்றும் முத்திரைகள் விற்பனை ஆகியவை அஞ்சல் நிலையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் செயற்பாட்டு பகுதி மற்றும் நிர்வாகப் பிரிவு நுவரெலியா மாநகர சபையின் அருகிலுள்ள காணிக்கு மாற்றப்படும் எனவும் அஞ்சல் துறை மற்றும் ஹோட்டல் துறையில் சேவை செய்பவர்கள், அஞ்சல் ஊழியர்கள் அணியும் பாரம்பரிய உடைகளை அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஹோட்டல் திட்டங்களுக்காக கையளிக்கப்படும் கட்டிடங்களில், நுவரெலியாவில் உள்ள உள்நாட்டு இறைவரி மற்றும் துறைமுக அதிகாரசபை விடுதிகளும் உள்ளடங்குகின்றன.

அதேவேளை கண்டியில் எஹெலேபொல வால்வா என்ற வரலாற்று கட்டிடம் இந்த திட்டத்திற்காக வழங்கப்பட உள்ளது.

அத்துடன் கண்டி அஞ்சல்; நிலையத்திலும் உத்தேச ஹோட்டல் திட்டத்தை முன்னெடுக்க, முதலீட்டாளர் ஒருவரைக் கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...