rtjy 133 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

Share

இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன, மேலும், சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில், எமக்கு முக்கியமாக இருந்தது சர்வதேசத்தில் நமது நாட்டைப் பற்றிய சரியான பிம்பத்தை உருவாக்குவதேயாகும். நாடு மிகவும் மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தின் பின்னர் மீண்டும் எழுந்திருப்பதற்குத் தேவையான மறுசீரமைப்பைச் செய்வதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் சர்வதேசமும் எம்மோடு இணைந்து கொள்கிறது. அந்தச் செய்தி சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவே செல்ல வேண்டும்.

அதன் காரணமாகத்தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நாம் செய்து கொண்ட ஒப்பந்தம் எமக்கு முக்கியமாகின்றது.

கடன் தொகையின் முதல் தவணை பெறப்பட்டதன் மூலம், நாட்டை படுகுழியில் இருந்து மீட்க நாம் எடுத்த நடவடிக்கை வெற்றிகரமான ஒன்று என்பது உறுதியானது.

அதன் மூலம் உலக வங்கி எமக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி செய்யத் தொடங்கியது. கடன் மறுசீரமைப்பைச் செய்வதற்கு அனைத்தும் மிகவும் முக்கியமானதாகியது. இவற்றால் வரும்காலங்களில் முதலீடுகள் இலங்கைக்கு வரத் தொடங்கும்.

தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன. சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன. அண்மையில் அமெரிக்காவின் டீ. எப். சீ என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் ஒரு பில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையில் மாத்திரம் 533 மில்லியன் டொலரை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்தில் ஒரு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதை இதிலிருந்து நாம் அறியலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...