tamilni 165 scaled
உலகம்செய்திகள்

தன்னுடைய கொலை வழக்கில் தானே ஆஜரான சிறுவனால் பரபரப்பு

Share

தன்னுடைய கொலை வழக்கில் தானே ஆஜரான சிறுவனால் பரபரப்பு

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் விசித்திரமான கொலை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுவன் அபய் சிங்(வயது 11), இவரது தந்தை, சிறுவனின் தாத்தா மற்றும் மாமா மீது புகார் அளித்துள்ளார்.

இதனை வழக்காக பதிவுசெய்த பொலிசார், விசாரணையை தொடங்கினர், இதன்போது அலகாபாத் ஐகோர்ட்டில் நேரில் ஆஜரான சிறுவன் அபய் சிங், தான் இறக்கவில்லை என்றும், உயிருடன் இருப்பதாகவே வாக்குமூலம் அளித்தார்.

ஆனாலும் அது நிராகரிக்கப்பட்டது, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போதும் நேரில் ஆஜரானான்.

மேலும், தான் தாத்தா- பாட்டியுடன் வசித்து வருவதாகவும், பொலிசார் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வதாகவும் கூறியுள்ளான்.

இதனை கருத்தில் கொண்ட நீதிமன்றம், உத்தர பிரதேச அரசு, பிலிபித் போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் நியுரியா காவல் நிலைய உயரதிகாரி ஆகியோர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை சிறுவன் மற்றும் அவரது தாத்தா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பொலிசாரின் அடுத்த கட்ட விசாரணையில், வரதட்சணை கேட்டு அபயின் தாயை, கணவன் துன்புறுத்தி வந்ததும், 2013ம் ஆண்டு முதல் தாத்தா- பாட்டியின் அரவணைப்பில் அபய் இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் அபயின் தாய் மரணமடைந்த பின்னர், அபயின் தாத்தா அவரது தந்தை மீது புகார் அளித்துள்ளார்.

இதற்கு பழிக்குபழி வாங்குவதற்காகவே பொய் புகாரை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...