tamilni 152 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய போதைவிருந்து

Share

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய போதைவிருந்து

யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ உணவகத்தில் “DJ night” எனும் பெயரில் இடம்பெற்ற போதை விருந்து கொண்டாட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என உணவக முகாமைத்துவம் விளக்கமளித்துள்ளது.

ரில்கோ கோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர், த.திலகராஜ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விளக்க அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ உணவகத்தில் “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் இடம்பெற்றதுடன் அங்கு வந்த சிலர் தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கியதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

நிகழ்வு நடந்து முடியும் வரை மாநகரசபை பிரதிநிதிகள் மேற்படி நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்து உணவகத்திற்கு வெளியே 06 பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

எமது நிறுவனம் சார்பில் அனுமதிக்கப்பட்ட மதுபானம் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்பட்டது.

நிகழ்வு முடியும் வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. நிகழ்வு முடிந்த பின் வந்திருந்தவர்கள் அமைதியாக வெளியேறிச் சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய போதைவிருந்து: விளக்கமளித்துள்ள உணவக நிர்வாகம் | Hotel Management Statement About Dj Night Party

Share
தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...