8 4 scaled
உலகம்செய்திகள்

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்

Share

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீன நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று, கிழக்கு ஜெருசலேமிலுள்ள Shalem என்னுமிடத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர், பெண் ராணுவ வீராங்கனைகளை கத்தியால் குத்தியுள்ளார்.

அதில், ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார், மற்றொரு பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 20 வயதுள்ள அந்த பெண்கள் இருவருக்கும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரை இஸ்ரேல் எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர், Issawiya என்னுமிடத்தைச் சேர்ந்த பாலஸ்தீன இளைஞர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில், சந்தேகத்துக்குரிய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் பொதுமக்கள் அனுமதியில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...